பகுத்தறிவு பற்றி பேச கருணாநிதிக்கு அருகதை இல்லை: தம்பிதுரை
சென்னை:
பகுத்தறிவு பற்றி பேசுவதற்க கருணாநிதிக்கு அருகதை இல்லை என்று தமிழக கல்வி அமைச்சர் தம்பிதுரைகூறியுள்ளார்.
கண்ணகி சிலை அகற்றப்பட்டது குறித்து கருணாநிதி வெளியிட்ட அறிக்கையை கண்டித்து தம்பிதுரைகூறியிருப்பதாவது:
திராவிட தலைவர்கள் எல்லாம் தங்கள் பெயரை தூய தமிழில் மாற்றிக் கொண்ட போதும், தன்னுடைய பெயரைகருணாநிதி மாற்றிக் கொண்டாரா? தன் மகனுக்கு ஸ்டாலின் என்று ஏன் பெயர் வைத்தார்? அது மட்டுமல்லாமல்அவரது குடும்ப டிவிக்கு சன் டிவி என்று ஏன் பெயர் வைத்தார்?
உதட்டளவில், தனது அரசியல் சுயலாபத்துக்காக தமிழ், பண்பாடு என்று சொல்லி கருணாநிதி தன்னை உயர்த்திக்கொண்டாரே தவிர, தமிழ் மற்றும் தமிழ் பண்பாட்டிற்காக கருணாநிதி இது வரை என்ன செய்தார்?
திராவிடர் கழகத்தின் சார்பில் அவருக்கு அண்ணாசாலையில் சிலை வைக்கப்பட்டது. அந்த சிலை சிலரால் இடித்துதள்ளப்பட்டது. மீண்டும் சிலை வைக்க முன் வந்த போது, உயிருடன் உள்ளவருக்கு சிலை வைப்பது நல்லதல்லஎன்று யாரோ சில ஜோதிடர்கள் சொன்னதைக் கேட்டுதான் சிலையே வேண்டாம் என்று கூறினார்.
மஞ்சள் தான் மங்களகரமானது என்று யாரோ சொன்னதை நம்பி இப்போது மஞ்சளாடையை போர்த்தி திரிகிறார்.
அன்றைக்கு கண்ணகி சிலையை அமைப்பதில் இவர் ஆர்வம் காட்ட காரணம், கண்ணகி சிலை வைக்கப்பட்டால்தான் அண்ணா மரணமடைவார் என்று யாரோ சொல்லிய ஆருடம் தான்.
வீட்டிலிருந்து வெளியே புறப்படும்போது கடவுளை தரிசிக்க வேண்டும் என்பதற்காகவே, கிருஷ்ணன் கோயிலுக்குஎதிராக கோபாலபுரத்தில் வீடு வாங்கினார்.
முன்பு கடற்கரையில் நிறவப்பட்டிருந்த தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின் உருவச்சிலை அங்கிருந்து மாநிலக் கல்லூரிவளாகத்துக்குள் மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது அதை யாரும் எதிர்க்கவில்லை.
கருணாநிதி கூற்றுப்படி இந்த அரசுக்கு ஜோதிடத்தின் மீதோ, வாஸ்து சாஸ்திரத்தின் மீதோ நம்பிக்கைஇருக்குமானால், 1991-96 வரை நடந்த எங்கள் ஆட்சியிலேயே இது போன்ற செயல்களை செய்திருக்கலாம்.கருணாநிதியின் இந்த கபட நாடகத்தைக் கண்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்.
கண்ணகி சிலை உரிய நேரத்தில், உரிய இடத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசுஅறிவித்துள்ளது. கருணாநிதி சும்மா இருப்பதே சுகம் என்று இருந்தால்தான் வயோதிக காலத்தில் அவருக்கு நல்லதுஎன்றார் தம்பிதுரை.