குழந்தையை கடித்துக் குதறிய ஆட்டோ டிரைவர் மிருகம்
விருத்தாசலம்:
விருத்தாசலத்தில் ஒன்றரை வயதுபெண் குழந்தையை தூக்கி சென்று உடல் முழுவதும் கடித்து காயப்படுத்தி கொலைசெய்ய முயன்ற ஆட்டோ டிரைவர் சங்கர் என்பவனை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் தாஸ்கண்ட் நகரில் வசிப்பவர்கள் ராஜா, அவரது மனைவி அலமேலு. ராஜா பழ வியாபாரம் செய்துவருகிறார் இவர்களது ஒன்றரை வயது மகள் மல்லிகா.
தாஸ்கண்ட் நகருக்கு அருகில் அண்ணா நகர் தெருவை சேர்ந்தவர் சங்கர் (26). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார்.சங்கர், ராஜா வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.
சம்பவத்தன்று ராஜாவின் வீட்டுக்கு சங்கர் சென்றான். அப்போது ராஜா வீட்டில் இல்லை. குழந்தை மல்லிகாவைதூக்கி சென்று சங்கர் விளையாடிக் கொண்டிருந்தார். பின்னர் அந்த குழந்தையை திரும்ப வீட்டில் கொண்டுவந்துவிட்டார். ஆனால், அக் குழந்தையின் உடல் முழுவதும் கடிபட்ட காயங்கள் இருந்தன.
இதையடுத்து சங்கரிடம் ராஜா கேட்டபோது, குழந்தை என் மார்பை கடித்து விட்டது. அதனால் நானும் பதிலுக்கு பலஇடங்களில் கடித்தேன் என்று கூறியுள்ளான்.
இதையடுத்து அலமேலு போலீசில் புகார் கூறினார். இதனால் போலீசார் சங்கர் மீது, சிறுமியை கடத்தி சென்று கடித்துகாயப்படுத்தி, கொலை செய்ய முயற்சி செய்ததாக வழக்கு பதிவு செய்து, ஆட்டோ டிரைவர் சங்கரை கைதுசெய்தனர்.
கிட்டத்தட்ட 25க்கும் மேற்பட்ட இடங்களில் அக் குழந்தையை சங்கர் கடித்துள்ளான்.
இது குறித்து போலீசார் சங்கரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications