கண்ணகி சிலை விவகாரம்: போராட்ட குழு அமைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கண்ணகி சிலையை திரும்பவும் அதே இடத்தில் நிறுவ, எதிர்க்கட்சிகள், தமிழ் அறிஞர்கள் இணைந்து தமிழகஅரசை எதிர்த்து போராட, போராட்ட குழுவை அமைத்துள்ளனர்.
மெரினா கடற்கரையிலிருந்த கண்ணகி சிலையை போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாக தமிழக அரசுஅங்கிருந்து அகற்றியது.
இந்நிலையில் கண்ணகி சிலையை அதே இடத்தில் நிறுவ, எதிர்க்கட்சிகள், தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள்,கவிஞர்கள் கூட்டத்துக்கு அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி ஏற்பாடு செய்திருந்தார்.
அந்த கூட்டத்தில், சிலையை அதே இடத்தில் நிறுவுவதற்காக தமிழக அரசை எதிர்த்து போராட ஒரு போராட்டகுழுவை அமைத்தனர். இந்த போராட்ட குழு அரசை எதிர்த்து எந்த வழியில் போராடலாம் என்று முடிவு செய்யும்.
இந்த குழு முதல் கட்டமாக ஜனவரி மாதம் இரண்டாம் தேதி தமிழர் கலாச்சார மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications