இனிமேலும் பொறுத்திருக்க முடியாது: இந்தியா
காபூல்:
இந்தியாவால் இனிமேலும் பாகிஸ்தானின் செயல்களைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது எனவெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கூறினார்.
பின்னர் நிருபர்களிடம் ஜஸ்வந்த் சிங் கூறுகையில்,
எங்கள் பொறுமைக்கு எல்லை உணடு. எங்களுக்கு எல்லையில்லா பொறுமை எல்லாம் கிடையாது. பாகிஸ்தானில்இருந்து இந்தியத் தூதரை திரும்ப அழைத்தது நாங்கள் இந்த விவகாரத்தில் எந்த அளவுக்குத் தீவிரமாக உள்ளோம்என்பதை அந் நாட்டுக்கு சுட்டிக் காட்டுவதற்காகத் தான்.
இது வெறும் சிக்னல் தான். இதை பாகிஸ்தான் புரிந்து கொள்ளாமல் மேலும் பிரச்சனையைக் கிளப்பினால் இந்தியாபார்த்துக் கொண்டு சும்மா இருக்காது.
நாடாளுமன்றம் என்ற செங்கல் கட்டடத்தை உடைக்க தீவிரவாதிகள் வரவில்லை. இந்தியா என்ற நாட்டை துண்டாடவந்தார்கள். எங்கள் நாட்டின் மீதே நடந்த தாக்குதல் அது.
இந்தத் தாக்குதலுக்குப் பின்னரும் பொறுமையாகத் தான் இருந்தோம். பாகிஸ்தான் திருந்தும் என எதிர்பார்த்தோம்.ஆனால், அது நடக்கவில்லை. இதனால் தான் தூதரை திரும்ப அழைத்துள்ளோம்.
ஆப்கானிஸ்தானுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயார். ஒரு இந்திய ராணுவ வீரனின்உணர்வோடு இங்கு நிற்கிறேன். 1996ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி தலிபான் காபூலுக்குள் நுழைவதற்கு 12 மணிநேரத்துக்கு முன் இந்தத் தூதரகத்தை மூடினோம்.
இந்தியா என்பது மாபெரும் சக்தி
இந்தியா ஒரு மாபெரும் சக்தி. இதை உலகமும் உணர ஆரம்பித்துள்ளது. நாங்கள் எங்கள் பலத்தை காட்டவிரும்பவில்லை. ஆனால், வேகமாய் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். இதை யாரும் தடுத்துவிட முடியாதுஎன்பதைக் கூறிக் கொள்ள விரும்புகிறோம்.
பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்துமா என்று பல நாட்டு நிருபர்களும் கேட்டபோது, இது குறித்துப்பேச நான் இங்கு (காபூல்) வரவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications