புலிகள் மீதான தடையை நீக்க இலங்கை அரசு திட்டம்
கொழும்பு:
டிசம்பர் 24ம் தேதி நள்ளிரவு 12.00 மணியிலிருந்து ஒரு மாத காலத்துக்கு போரை நிறுத்துவதாக நேற்று(வெள்ளிக்கிழமை) இலங்கை அரசும் அறிவித்துள்ளது.
இப்போது இலங்கை அரசும் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 24லிருந்து ஒரு மாதகாலத்துக்கு போரை நிறுத்துவதாக நேற்று அறிவித்துள்ளது.
மேலும் விடுதலைப்புலிகள் இருக்கும் இடமான வடக்கு, கிழக்கு இலங்கை பகுதியில் பொருட்களை எடுத்துசெல்வதற்கு தடை இருந்தது. இப்போது அந்த இடங்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள்எடுத்து செல்வதற்கு விரைவில் தடையை விலக்க போவதாகவும் கூறியுள்ளது.
இலங்கையில் அமைதியேற்பட இலங்கை அரசு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.
அதே போல புலிகளுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராகும் நிலையில் எல்.டி.டி.ஈ. மீதான தடையை நீக்கவும்இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications