பா.ம.க. பெண் எம்.எல்.ஏ. கடத்தல்: செங்கோட்டையன் மீது ராமதாஸ் புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தாராபுரம் எம்.எல்.ஏ. சிவகாமி வின்சென்ட்டை அதிமுக தலைமை நிலையச் செயலாளர் செங்கோட்டையன் கடத்திசென்று மறைத்து வைத்துள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புகார் கூறிள்ளார்.

பா.ம.கவை உடைக்க அதிமுக முயன்று வருவதாக ஏற்கனவே புகார்கள் எழுந்துள்ளன. இந் நிலையில் சிவகாமியைநான்கு நாட்களாக காணவில்லை. அவரை அதிமுகவுக்கு இழுப்பதற்காக செங்கோட்டையன் தான் கடத்திச்சென்றுள்ளதாக ராமதாஸ் கூறியுள்ளார்.

தாராபுரம் பெண் எம்.எல்.ஏ. உட்பட ஏழு பேர் அதிமுகவுக்கு ஆதரவாக கட்சி தாவ தயாராகி விட்டதாக நேற்றுதகவல் பரவியது. இதையடுத்து இந்த 7 பேரையும் உடனடியாக தன்னை சந்திக்கும்படி ராமதாஸ் உத்தரவிட்டார்.

ஆனால், சிவகாமியை தவிர மற்ற 6 எம்.எல்.ஏக்களும் வந்து சேர்ந்தனர். இந்த 6 பேரையும் உடன் வைத்துக்கொண்டு இரவோடு இரவாக ராமதாஸ் நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

எங்கள் கட்சியின் பெண் எம்.எல்.ஏ. சிவகாமி, அவரது கணவர் வின்சென்ட் மற்றும் அவரது குழந்தைகளை,அதிமுக தலைமை செயலாளர் செங்கோட்டையன் கடத்திச் சென்று நான்கு நாட்களாக மறைத்து வைத்துள்ளார்.

இவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லா விட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+