பெண் எம்.எல்.ஏ.வை மீட்டு தரக் கோரி கவர்னரிடம் பா.ம.க. மனு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தாராபுரம் எம்.எல்.ஏ. சிவகாமி வின்சென்ட்டை அதிமுக தலைமை நிலையச் செயலாளர் செங்கோட்டையன் கடத்திசென்று மறைத்து வைத்துள்ளதாகவும் அவரை மீட்டு தருமாறும் பா.ம.க. சார்பில் கவர்னர் ரங்கராஜனிடம் மனுகொடுக்கப்பட்டுள்ளது.
எங்கள் கட்சியின் பெண் எம்.எல்.ஏ. சிவகாமி, அவரது கணவர் வின்சென்ட் மற்றும் அவரது குழந்தைகளை,அதிமுக தலைமை செயலாளர் செங்கோட்டையன் கடத்திச் சென்று நான்கு நாட்களாக மறைத்து வைத்துள்ளார்,அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், இல்லா விட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றுநிருபர்களிடம் நேற்று (வெள்ளக்கிழமை) ராமதாஸ் கூறியிருந்தார்.
மேலும் பாமக தொண்டர்கள் ஜி.கே.மணி தலைமையில் சிவகாமி குடும்பத்தை விடுவிக்குமாறு செங்கோட்டையன்வீட்டின் முன் கோஷம் எழுப்பினர்.
இது தொடர்பாக பா.ம.க. கவர்னரிடம் இன்று மனு கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications