For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பின்லேடனைவிட பெரிய கொலையாளி பாகிஸ்தான்: நியூயார்க் டைம்ஸ்

By Staff
Google Oneindia Tamil News

நியூயார்க்:

பின்லேடனை விட அதிக அளவில் படுகொலைகளைச் செய்துள்ளது பாகிஸ்தானின் உளவுப் படையான ஐ.எஸ்.ஐ. எனநியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.

நிக்கோலஸ் டி.கிஸ்டோப் என்ற நியூயார்க் டைம்ஸ் விமர்சகர் இதில் எழுதியுள்ள கட்டுரையில்,

இந்தியாவில் பாகிஸ்தான் பல ஆண்டுகளாக தீவிரவாதத்தை தூண்டி வருகிறது. ஆனால், பாகிஸ்தானுடன் சேர்ந்துதீவிரவாதத்தை ஒழிப்பதாக அமெரிக்கா கூறிக் கொள்வதில் அர்த்தம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்தியாவில், குறிப்பாக, காஷ்மீரில் ஆயிரக்கணக்கான மக்களை பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ.தீவிரவாதிகள் உதவியுடன் கொன்று குவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் விரட்டியடிக்கப்பட்டுள்ள தலிபான்களும் அவர்களுக்கு ஆதரவாக போராடி வந்தஆயிரக்கணக்கான பாகிஸ்தான் தீவிரவாதிகளும் இப்போது பாகிஸ்தானுக்கே திரும்பி வந்துவிட்டனர். இந்தக்கும்பல்களால் பாகிஸ்தான் உலகிலேயே மிக அபாயகரமான நாடாக மாறிவிட்டது.

இது இந்தியாவுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தும். பின்லேடனை விட பயங்கரமாக கொலைகார அமைப்புஐ.எஸ்.ஐ. தான்.

நிலைமை இப்படியிருக்க ஆப்கானிஸ்தானில் தீவிரவாத அரசை அமெரிக்கா தூக்கி எறிந்தது. ஆனால்,பாகிஸ்தானில் தீவிரவாத அரசை ஆதரிக்கிறது. அமெரிக்காவுக்கும் வேறு வழியில்லை. பர்வேஸ் முஷாரபை ஒருபக்கம் ஆதரித்துக் கொண்டே மறுபக்கம் நெருக்குதல் கொடுத்துத் தான் தீவிரவாதிகளை ஒழிக்கச் செய்ய வேண்டியநிலையில் உள்ளது. இப்போதுள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு உள்ள ஒரே நம்பிக்கை முஷாரப் தான்.

இப்போது பாகிஸ்தான் என்பதே பிரச்சனையாகிவிட்டது. இது அந்த நாட்டுக்கு மட்டும் பிரச்சனையல்ல. தெற்குஆசியாவுக்கே பிரச்சனை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X