For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரோடு போடாமலே பில் தயார் செய்து மோசடி: 5 அதிகாரிகள் கைது

By Staff
Google Oneindia Tamil News

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் ரோடு போடாமலே ரோடு போட்டதாக, பல லட்சம் மோசடி செய்ததாக நெடுஞ்சாலை துறைஅதிகாரிகள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் பல இடங்களில் ரோடு போடாமலே போட்டதாக கணக்கு காட்டி பல லட்சம் மோசடிசெய்ததாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் கடந்த 1999ம் ஆண்டு புகார் கொடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியசாமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்சோமசுந்தரம் வழக்கு பதிவு செய்தார். பிறகு இது குறித்து விசாரணை நடைபெற்றது.

விசாரணையில் அதிகாரிகள் உட்பட பல லட்சம் மோசடி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில்சம்பந்தப்பட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 5 பேர் நெடுஞ்சாலை துறை யை சேர்ந்த அதிகாரிகள்.

கைதான 8 பேரும் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 8 பேரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதிஉத்தரவிட்டார்.

இந்த வழக்கில் விரைவில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X