காஷ்மீரில் பின் லேடன் பதுங்கலா?
பெய்ஜிங்:
ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி பாகிஸ்தான் வழியாக சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடன் காஷ்மீருக்குள்வந்து விட்டதாக அடையாளம் தெரியாத ஒருவர் இத்தாலிய தொலைக்காட்சி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
ராய்ட்ரே என்ற இத்தாலிய தொலைக்காட்சியில் முதுகை மட்டும் காட்டிக் கொண்டு பேசிய அந்த அடையாளம்தெரியாத நபர், கடந்த 12ம் தேதியே ஆப்கானிஸ்தானின் தோரா போரா மலையிலிருந்து பின் லேடன் தப்பிச்சென்று விட்டதாகக் கூறினார்.
பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐயின் துணையுடன் பின் லேடன் காஷ்மீருக்குள் ஊடுருவியிருப்பதாகவும்அந்த அடையாளம் தெரியாத நபர் கூறினார்.
மேலும் 2,000க்கும் மேற்பட்ட அல்-கொய்தா படையினரும் ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பித்து, உலகின் பல்வேறுபகுதிகளுக்கும் சென்றுள்ளதாகவும் அந்நபர் கூறினார்.
ரஷ்யா அருகேயுள்ள செசன்யாவுக்கும் இந்தியாவின் காஷ்மீருக்கும்தான் அதிகமான அல்-கொய்தாவினர்தப்பியோடியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications