மதுரை அருகே குண்டு வெடித்து 3 சிறுவர்கள் பலி
மதுரை:
மதுரை அருகே சாப்டூரில் விவசாய கட்டிடத்தில் பதுக்கி வைத்திருந்த குண்டு வெடித்ததில் 3 மாணவர்கள்இறந்தனர்.
சாப்டூரில் விவசாய சங்க கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் அருகே சிறுவர்கள் விளையாடுவது வழக்கம். நேற்று(சனிக்கிழமை) மாலையும் இதே போல் பள்ளி மாணவர்கள் பலர் விளையாடி வந்தனர்.
அப்போது விவசாய கட்டிடம் பூட்டியிருந்தது. மாணவர்கள் சிலர் கதவில் சாய்ந்த போது கதவு திறந்தது. உள்ளேசென்ற சிறுவர்கள் உருண்டை உருண்டையாக வெடிகுண்டுகள் ஏராளமாக கிடந்ததை பார்த்துள்ளனர்.
வெடிகுண்டு என்று அறியாத சிறுவர்கள் அதையும் சாதாரண குண்டு போல் தூக்கி போட்டு விளையாடி உள்ளனர்.இதில் ஒரு குண்டு வெடித்தது. இதனால் கட்டிடத்தில் உள்ள மற்ற குண்டுகளும் மொத்தமாக வெடித்ததில் கட்டிடம்தூள் தூளானது.
இதில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பெத்தண்ணன் என்பவரது மகன் ரவிகுமார் (13) இறந்தார். கருப்பையாஎன்பவரின் மகன் தங்கராஜ் மருத்துவமனையில் இறந்தார்.
சுப்பையா என்பவரின் மகன் கதிரேசன் கட்டிட இடிபாடுகளில் இறந்து கிடந்தார். இவரது உடலை மீட்பதற்குஇரண்டு மணி நேரம் ஆனது. சண்முகவேல் என்பவரின் மகன் பாண்டி படுகாயமடைந்து மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார்.
தகவலறிந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் துரைராஜ், மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஆயுஷ்மணிதிவாரி,டி.எஸ்.பி.கர்ணன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி நடந்துவருகிறது.
இந்த சம்பவத்தால் சாப்டூரே சோகமயமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் சோகமான முகஙகளும், அழுகுரலுமேகேட்கிறது.
இப்பகுதியில் அடிக்கடி ஜாதி மோதல்கள் நடை பெறுவது வழக்கம். அந்த மாதிரி மோதல்கள் நடந்தால்வீசுவதற்காக கொண்டு வந்த குண்டுகளை தான் யாரோ இங்கு மறைத்து வைத்துள்ளனர். இதைப் போலீசார் பெரியவிஷயமாக கருதவில்லை. இதனால் தான் இந்த விபரீதம் நடை பெற்றுள்ளது.
போலீசார் சரியான நடவடிக்கை மேற்கொள்ளாததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இனிமேலாவது போலீசார்கெடுபிடியுடன் செயல்படுவது அவசியம்.












Click it and Unblock the Notifications