பாகிஸ்தான் ராணுவம் தாக்கி 2 எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

ஜம்மு:

ஜம்முவில் பாகிஸ்தான் ராணுவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 2 எல்லைப்பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

ஜம்முவில் உள்ள சம்பா பகுதியின் சர்வதேச எல்லைக் கோட்டுக்கு அருகே எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள்இன்று ரோந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பாகிஸ்தான் ராணுவத்தினர் இவர்கள் மீது சராமாரியாகத் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.

இச்சம்பவத்தில் ஜெய்ப்பிரகாஷ் மற்றும் கே. பாய் ஆகிய எல்லைப் பாதுகாப்புப் படை கான்ஸ்டபிள்கள் அந்தஇடத்திலேயே குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.

சந்தர்கோஷ், கே.சி. தாஸ் மற்றும் பாஸ்கர் ஆகிய கான்ஸ்டபிள்கள் பலத்த காயமடைந்தனர். இவர்கள் உடனடியாகராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

துவாரிகாந்த் என்ற சிவிலியனும் இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு உதவுவதற்காக இந்திய ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+