கருணாநிதியின் சதியை முறியடிப்போம்: ஜெயலலிதா
சென்னை:
அதிமுகவின் ஆட்சியை முறியடிக்க நினைக்கும் கருணாநிதியின் சதியை முறியடிபப்போம் என்று அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முன்பு எம்.ஜி.ஆர். ஆட்சி செய்தபோது ரோட்டில் பெருச்சாளி செத்து கிடந்தால் கூட அது எம்.ஜி.ஆரால் தான்என்று போராட்டம் நடத்துவார் கருணாநிதி. அதே பாணியில் இப்போதும் ஏதாவது துரும்பு கிடைக்காதா, துரும்பைதூணாக்க முடியாதா என்று அலைந்து கொண்டிருக்கிறார்.
நாட்டை சுரண்டி அரசு கஜானாவை காலியாக வைத்து விட்டுச் சென்ற கருணாநிதி செயலால் கடன் சுமையாகிமக்களுக்கு சென்று சேர வேண்டிய பயன்கள் தடைபட்டு நிற்கின்றன.
எந்த ஏழை எளிய மக்கள் வாழ்வில் ஒளி பெற வேண்டும் என்று எம்.ஜி.ஆர். விரும்பினாரோ, அந்த மக்களின்வாழ்க்கை எல்லா வகையிலும் மேம்பாடு அடைய வேண்டும் என்று நாம் அரும்பாடு பட்டு வருகிறோம்.
கருணாநிதியும் அவரது அடிவருடிகளும் தமிழக மக்களின் நல் வாழ்வை சீர் குலைய செய்து வரும் சதி செயல்களைமுறியடித்து எம்.ஜி.ஆரின் வழியில் செயல்பட்டு, தமிழக மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்திட தொய்வின்றிபாடுபடுவோம் என்று அவரது நினைவு நாளில் சூளுரை ஏற்போம் என்று அந்த அறிக்கையில் கூறி உள்ளார்ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications