பாகிஸ்தான் எங்களைத் தடை செய்யவில்லை: லக்ஷர்-ஏ-தொய்பா கொக்கரிப்பு
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் எங்களைத் தடை செய்யவில்லை என்று லக்ஷர்-ஏ-தொய்பா தீவிரவதாத அமைப்பு கூறியுள்ளது.
ஆனால் இதுகுறித்து தங்களுக்கு எந்தத் தகவலும் பாகிஸ்தான் அரசிடமிருந்து வரவில்லை என்று அந்தஅமைப்பினர் கூறியுள்ளனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் அரசு எங்களை அணுகவேயில்லை என்றும் அவ்வமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
லக்ஷர்-ஏ-தொய்பா அமைப்பின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் சென்ட்ரல்வங்கியிலிருந்தும் இதுவரை எந்தவிதமான உத்தரவும் அந்த அமைப்புக்குச் செல்லவில்லை.
இதனால் பாகிஸ்தான் நேற்று வெளியிட்ட அறிவிப்பு ஏதோ பேருக்குத்தான் என்பது போலத் தோன்றுகிறது.
பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பும் வெளியுறவு அமைச்சர் அப்துல் சத்தாரும் வெளிநாடுகளில் பயணம்மேற்கொண்டிருப்பதால், இதுகுறித்து தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது.
இதற்கிடையே அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்காக பாகிஸ்தான் தங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாதுஎன்று லக்ஷர்-ஏ-தொய்பா அமைப்பு பாகிஸ்தான் அரசை எச்சரித்துள்ளது.
"எங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன் பாகிஸ்தான் அரசு ஆயிரம் முறை யோசிக்க வேண்டும். ஏனென்றால்பாகிஸ்தான் மக்கள் அனைவரும் எங்கள் பின்னால் நிற்கின்றனர். தீவிரவாதச் செயல்களைத் எதிர்த்துதான் நாங்கள்போரிட்டுக் கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் எங்களை முழுவதும் நம்புகிறார்கள்" என்று அவ்வமைப்புகூறியுள்ளது.












Click it and Unblock the Notifications