இந்திய ராணுவம் தாக்குதல்: லக்ஷர்-ஏ-தொய்பா துணைத் தலைவர் உள்பட 2 பேர் பலி
ஸ்ரீநகர்:
பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் லக்ஷர்-ஏ-தொய்பா தீவிரவாத அமைப்பின்துணைத் தலைவர் சைபுல்லா அஸ்காரி ஓவாசிஸ் மற்றும் அவனுடைய கூட்டாளி மிர்ஸா என்ற அபு அலி ஆகியஇருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வீடு வீடாகச் சென்று ராணுவத்தினர் சோதனை செய்து கொண்டிருந்தபோது, ஒரு வீட்டில் ஒளிந்திருந்ததீவிரவாதிகள் திடீரென்று துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.
இதையடுத்து அங்கு இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இத்தாக்குதலில் சைபுல்லாவும் அபு அலியும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே காஷ்மீரில் நடந்த பல்வேறு தற்கொலைப் படைத் தாக்குதல்களுக்கு சைபுல்லாதான்காரணம் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார்.
கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து இரண்டு ஏ.கே. ரக துப்பாக்கிகள் உள்பட பல ஆயுதங்களை ராணுவத்தினர்கைப்பற்றினர்.












Click it and Unblock the Notifications