For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"கண்ணகி சிலைக்காக போராட்டம் வேண்டாம்"

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கண்ணகி சிலைக்காக போராட்டம் வேண்டாம் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.பி. சுப்பிரமணியம்கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கண்ணகி சிலையை அதே இடத்தில் வைக்க கோரி போராட்டம் நடத்துவதாக அரசியல் கட்சித்தலைவர்கள்,தமிழறிஞர்கள் சிலர் கூறி வருகின்றனர்.

சிலையை மீண்டும் கடற்கரையில் வைக்க வேண்டும் என கோருவது சரி, ஆனால் முன்பு இருந்த இடத்தில் தான்வைக்கப்பட வேண்டும் என கோருவதில் என்ன முக்கியத்துவம் உள்ளது.

முதலில் சிலை இருந்த இடம் கண்ணகி பிறந்த இடமா இல்லை குடியிருந்த இடமா? இவர்களின் கோரிக்கைஅறிவுக்கு ஏற்புடையதாக இல்லை. தவிரவும் கண்ணகி சிலை பிரச்சினை மக்கள் பிரச்சினையும் இல்லை.

தாலிக்கட்டிய மனைவியை அம்போ என்று விட்டுவிட்டு, பல வருடங்கள் சொத்து, சுகம், இளமை எல்லாம் இழந்தபிறகு, வறுமையில் உழன்று கொண்டிருந்த கண்ணகியை அழைத்து கொண்டு பிழைப்புக்காக மதுரை செல்கிறான்கோவலன்.

தமிழர் கலாச்சாரம் என முத்திரை பதித்து கண்ணகி, கோவலன் கலாச்சாரத்தை மக்கள் மீது திணிக்க வேண்டாம்.தாய், தந்தையர் யாராவது தங்கள் மகளை கண்ணகியைப் போல் வாழ்வாயாக என்று வாழ்த்துவார்களா?

எந்த கலாச்சாரத்தை காப்பாற்ற கருணாநிதி இப்படி ஆவேசப்படுகிறார் புரியவில்லை. பொது மக்களுக்கு துன்பமும்,அரசுக்கு மட்டுமல்லாது தேசத்துக்கே பெரும் நஷ்டம் தான் போராட்டங்கலளால் ஏற்படுகிறது.

எனவே போராட்டங்களை கைவிட வேண்டும் என்று சம்பந்தப் பட்டவர்களை கேட்டுக் கொள்கிறேன் என்றுஅவ்வறிக்கையில் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X