ஊட்டி அருகே புலியைச் சுட்டுக் கொன்ற 2 பேர் கைது
கோயம்புத்தூர்:
நீலகிரி மாவட்டம் கூடலூரில் புலியைச் சுட்டுக் கொன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது பற்றி வனத்துறை அதிகாரி தீபக் ஸ்ரீவத்சவா கூறியிருப்பதாவது:
கூடலூரில் இருந்து 140 கிமீ தூரத்தில் புதர்கள் அடர்ந்த பகுதியில் நாற்றம் எடுத்தது.
உடனே வனத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டபோது ஏழு வயதான ஒரு பெண் புலி, கழுத்தில் குண்டுக்காயத்துடன் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்துள்ளோம்.மேலும் இரண்டு பேரை தேடிவருகின்றோம்.
இப்பகுதியில் புலியை சுட்டு கொன்றது இது தான் முதல் முறை. ஒரு வாரத்திற்கு முன்பே ஏலக்காய் எஸ்டேட்டில்புலியை சுட்டு கொன்று விட்டு, உ டலை இந்த தேயிலை புதரில் கொண்டு வந்து மறைத்துள்ளனர்.
எதற்காகக் கொன்றார்கள் என்று தெரியவில்லை. எனென்றால் புலியின் எந்த பாகமும் சேதமடையவில்லை என்றுஅந்த அதிகாரி கூறியுள்ளார்.