பின் லேடன் இறந்திருக்கலாம்: அமெரிக்கா சந்தேகம்
இஸ்லாமாபாத்:
சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடன் இறந்து போயிருக்கலாம் என்று ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்திவரும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் அறிவித்துள்ளன.
இதையடுத்து அமெரிக்க விமானங்கள் இந்த மலைப் பகுதிகளில் கடுமையான குண்டு வீச்சுத் தாக்குதல்களைநடத்தின.
அமெரிக்காவின் பி-52 ரக விமானங்கள் "டெய்சி கட்டர்" போன்ற பயங்கரக் குண்டுகளையும் இந்த மலைப்பகுதிகளில் வீசித் தாக்குதல் நடத்தின.
இதற்கிடையே பின் லேடன் பாகிஸ்தானுக்குத் தப்பி ஓடிவிட்டதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருந்தன.நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) வெளிவந்த ஒரு தகவலோ, பின் லேடன் காஷ்மீருக்குள் ஊடுருவியிருப்பதாகக்கூறியது.
இந்நிலையில் பின் லேடன் இறந்திருக்கலாம் என்று அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள்அறிவித்துள்ளன.
தோரா போரா மலைப் பகுதிகளில்தான் அவன் கடைசியாகத் தென்பட்டுள்ளான். அங்கு அமெரிக்க விமானங்கள்நடத்திய பயங்கரமான குண்டு வீச்சுத் தாக்குதல்களில் நிச்சயம் அவன் பலியாகியிருப்பான் என்று கூட்டுப்படைகளின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.












Click it and Unblock the Notifications