லஷ்கர்- ஜெய்ஷ் அமைப்புகளின் வங்கிக் கணக்குகளை பாகிஸ்தான் முடக்கியது
கராச்சி:
இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய 2 தீவிரவாத அமைப்புகளின் வங்கிக் கணக்குகளையும்பாகிஸ்தான் இன்று அதிகாரப்பூர்வமாக முடக்கியது.
இதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக சில தினங்களுக்கு முன் இந்த அமைப்புகளின்சொத்துக்களை முடக்குவதாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சும் அறிவித்தார்.
முதலில் இந்த அமைப்புகள் தான் தாக்குதல் நடத்தின என்பதற்கு ஆதாரம் வேண்டும், சாட்சி வேண்டும் என வக்கீல்வாஞ்சிநாதன் மாதிரி வசனம் பேசிக் கொணடிருந்த பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் இறங்கிவந்துவிட்டார். இந்த அமைப்புகளின் வங்கிக் கணக்குகளை முடக்க ஒப்புக் கொண்டார்.
இந்தியாவின் தாக்குதல் உறுதி என்பதை அமெரிக்கா தெள்ளத் தெளிவாய் பாகிஸ்தானுக்கு எடுத்துச் சொன்னதால்இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாகிஸ்தானின் ஸ்டேட் வங்கியின் செய்தித் தொடர்பாளர் சையத் வசீமுதீன் வெளியிட்ட அறிக்கையில்,இந்த இரு அமைப்புகளின் வங்கிக் கணக்குகளையும் உடனடியாக முடக்குமாறு பாகிஸ்தானில் உள்ள அனைத்துவங்கிகளுக்கும் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசின் நடவடிக்கையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications