பாக். தூதரக அதிகாரி நாட்டைவிட்டு வெளியேற இந்தியா உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்திய நாடாளுமன்ற ஊழியரிடம் இருந்து நாட்டின் ரகசியங்களை வாங்கிய பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரிமுகம்மத் ஷெரீப் கான் 7 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என இந்தியா உத்தரவிட்டுள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தின் கேள்விப் பிரிவைச் சேர்ந்த உதவி அதிகாரியான அஜய்குமார் என்பவரிடம் இருந்துபாகிஸ்தான் தூதரகத்தைச் சேர்ந்த முகம்மத் ஷெரீப் கான் என்ற அதிகாரி நேற்று இந்திய ராணுவம், அணுஆயுதங்கள், கடற்படை, மின்சார கட்டமைப்பு, ரயில்வே கட்டமைப்பு, பாதுகாப்பு அமைப்புகளின் செயல்பாடுஆகியவை குறித்த ரகசிய தகவல்கள் அடங்கிய தகவல்களை வாங்கும்போது பிடிபட்டார்.

இதையடுத்து அவரை 7 நாட்களுக்குள் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசுஉத்தரவிட்டுள்ளது.

ஷெரீப் கானை டெல்லி போலீசார் அழைத்துச்சென்று விசாரித்தனர். பின்னர் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளிடம்ஒப்படைத்தனர். ஆனால், அவரை டெல்லி போலீசார் மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளதாகவும், பலத்தகாயங்களுடன் அவர் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் கூறினர்.

அதே போல பிடிபட்ட அஜய்குமாரிடம் போலீசார் மிகக் கடுமையாக விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையில், நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து பலமுறை தன்னிடம் முகம்மத் ஷெரீப் விவரங்கள்கேட்டதாக அஜய்குமார் கூறியுள்ளார். இதனால், நாடாளுமன்றத் தாக்குதலில் பாகிஸ்தான் தூதரகத்துக்கும்தொடர்பிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

முன்னதாக பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் விஜய் நம்பியாரை திரும்பப் பெற்றுக் கொள்வதாக இந்தியாஅறிவித்தது. இப்போது பாகிஸ்தான் தூதரக உளவாளியை நாட்டை விட்டு தூக்கி எறிந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+