தேசிய கீதம்: இந்திய உதவி கேட்கும் ஆப்கானிஸ்தான்
காபூல்:
ஆப்கானிஸ்தானில் இருந்த அனைத்து இசைக் கருவிகளையும் தலிபான்கள் உடைத்துப் போட்டுவிட்டதால், தேசியகீதத்தை இசைக்க இசைக் கருவிகளை அனுப்பி வைக்குமாறு இந்தியாவிடம் ஆப்கானிஸ்தான் கோரிக்கைவிடுத்துள்ளது.
இப்போது அங்கு தேசிய கீதம் இசைக்கக் கூட இசைக் கருவிகள் இல்லை. தேசியகீதம் அடங்கிய ஒரே ஒரு கேசட்மட்டும் தான் அந் நாட்டில் உள்ளது. சமீபத்தில் அந் நாட்டு அரசு பதவியேற்றபோது டேப் ரெக்கார்டரில் தேசியகீதம் போடுவதற்காக கேசட்டைத் தேடியபோது ஒரே ஒரு கேசட் தான் அந்த நாட்டிலேயே இருப்பதுதெரியவந்தது. கேசட்டின் தரம் மிக மோசமாக இருந்ததால் அதுவும் இழுத்துப் பிடித்துப் பாடியது.
பதவியேற்பில் இருந்த கலாச்சார அமைச்சரின் பார்வைக்கு இந்த விவகாரம் வந்தவுடன் அதிர்ந்துபோன அவர்உடனடியாக இந்திய அரசைத் தொடர்பு கொண்டார். உடனடியாக ஆர்மோனியம், தபேலா, சரோட், சிதார்,தம்பூரா, சாரங்கி, வயலின், கிதார், பியானோ, புல்லாங்குழல், பாஞ்சோ டிரம்கள், டோல் ஆகிய இசைக் கருவுகளைஅனுப்பி வைத்து உதவுமாறு அவசர தகவல் அனுப்பியுள்ளார்.
இந்தியாவிடம் மட்டும் தான் இந்த உதவியைக் கோரியுள்ளோம். இந்தியாவால் தான் எங்கள் கலாச்சாரத்தேவைகளைப் பூர்த்தி செய்து வைக்க முடியும் என அமைச்சக அதிகாரிகள் கருத்துத் தெரிவித்தனர்.
ஒரு நாட்டின் இதய ஓசை மாதிரியான தேசிய கீதத்தையே அழித்துவிட்டுப் போயிருக்கிறது தீவிரவாதம்.












Click it and Unblock the Notifications