மிதக்கிறது சென்னை: தொடரும் கன மழை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை நகரில் கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக சென்னையின்பெரும்பாலான பகுதிகள் மழை நீரில் மிதக்கின்றன.

வட கிழக்குப் பருவ மழை நீடிப்பதாலும், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்காரணமாகவும் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது.

குறிப்பாக சென்னை நகரில் தொடர்ந்து நான்கு நாட்களாக பேய் மழை பெய்து வருகிறது. மழை மேலும் இரண்டுநாட்களுக்கு நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கன மழை காரணமாக சென்னை நகரில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் பெரும்பாலானபகுதிகள் மழை நீரில் மிதக்கின்றன. வெள்ளம் பாதித்த நகர் போல சென்னை காணப்படுகிறது.

நகரின் தாழ்வான பகுதிகள் அனைத்தும் மழை நீரில் மூழ்கியுள்ளன. பல பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துவிட்டதால் அந்த வீடுகளில் வசித்து

வந்த மக்கள் அரசுப் பள்ளிகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

தண்ணீர் தேங்கிக் கிடக்கும் பல பகுதிகள் குளங்கள் போலக் காணப்படுகின்றன. இவற்றில் சிறுவர்களும்,பெரியவர்களும் மீன்கள் பிடித்துக் கொண்டிப்பதைக் காண முடிகிறது.

பல பகுதிகளில் பெரிய, பெரிய தெர்மாகூல் அட்டைகளை படகுகள் போல பொதுமக்கள் பயன்படுத்தி தாங்கள்நினைக்கும் இடத்திற்குப் போய் வருகின்றனர்.

தொடர் மழை காரணமாக பல தார்ச்சாலைகள் பெயர்ந்து போய் பள்ளம், பள்ளமாகி விட்டன. பல சாலைகள்போக்குவரத்திற்கே லாயக்கற்றதாகி உள்ளது. மழை மேலும் சில நாட்களுக்கு நீடித்தால் பொதுமக்கள் பெரும்அவதிக்குள்ளாக நேரிடும் சூழ்நிலை உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+