மேல்மருவத்தூருக்கு 25 சிறப்பு ரயில்கள்
சென்னை:
சென்னை அருகே உள்ள மேல் மருவத்தூரில் நடைபெறும் இருமுடி திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின்பல்வேறு நகரங்களிலிருந்து சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்கவுள்ளது.
டிசம்பர் 23ம் தேதி முதல் இயக்கப்படும் இந்த ரயில்கள் அடுத்த மாதம் கடைசி வரை இயக்கப்படும்.
சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருமங்கலம், தூத்துக்குடி, பாலக்காடு,பெங்களூர் ஆகிய ஊர்களுக்கு அகலப் பாதையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
மீட்டர் கேஜ் பாதையில், சிவகாசி, ராஜபாளையம், திருநெல்வேலி, தஞ்சாவூர், முத்துப்பேட்டை, காரைக்குடி, நாகூர்,தேவகோட்டை, ராமநாதபுரம், திருவாரூர், பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை, போடிநாயக்கனூர், தேனி, பழனி,ஒட்டன்சத்திரம், பரமக்குடி, ராமேஸ்வரம், செங்கோட்டை, அருப்புக்கோட்டை, அறந்தாங்கி, புதுக்கோட்டை,கடலூர், சிதம்பரம், அரகண்ட நல்லூர் ஆகிய ஊர்களிலிருந்து மேல் மருவத்தூருக்கு சிறப்பு ரயில்கள்இயக்கப்படுகின்றன.-












Click it and Unblock the Notifications