பாமக அழிய நானும் ஒரு காரணம்: வாழப்பாடி கவலை
சேலம்:
தமிழகத்தில் பாமக அழிவதற்கு நானும் ஒரு காரணமாக இருந்து விட்டேன் என்பதற்காக மிகவும் வருந்துகின்றேன்என்று சேலத்தில் நடந்த வன்னியர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் வாழப்பாடி ராமமூர்த்தி கூறியுள்ளார்.
சேலத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த வன்னியர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் வாழப்பாடி ராமமூர்த்திபேசியதாவது:
வன்னியர் சமுதாய மக்களை வாழ வைக்க மட்டுமே இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பழையபடி நாங்கள்வன்முறையை தான் நாடுவோம் என்று நீங்கள் சொன்னால் நான் இந்த சங்கத்தை விட்டு விலகி விடுவேன்.
நமது சமூகத்தில் 80 சதவிகிதம் பேர் முன்னேற முடியாமலும், படிக்க முடியாமலும், வேலை கிடைக்காமலும் இருந்துவருகின்றனர். நமக்கு சண்டை முக்கியமல்ல.
நம் மக்களை ஏமாற்றி தன்னையும் தன் குடும்பத்தையும் வளமாக்கி கொண்டவர் ராமதாஸ். அவரது கட்சியை போலநமது சங்கம் இருக்க நான் விரும்பவில்லை.
தமிழகத்தில் பாமக அழிய நானும் ஒரு காரணமாக இருந்து விட்டேன் என்பதற்காக நான் மிகவும் வருந்துகின்றேன்.20 எம்.எல்.ஏ.க்களை வைத்து கொண்டு ராமதாஸ் அரசியல் கட்சிகளோடு பேரம் நடத்தி கொண்டு இருக்கிறார்.
வன்னியர்களுக்கு முன்பு நண்டு என்ற பட்ட பெயர் இருந்தது. தற்போது தவக்களை என்கின்றனர். கூட்டணி விட்டுகூட்டணி தாவிக்கொண்டு இருக்கும் ராமதாஸை வைத்து தான் இந்த பெயரை வைத்துள்ளனர்.
பாண்டிச்சேரியில் பாமக ஆட்சியை அமைப்போம் என்று சொன்ன ராமதாஸ், வன்னியரான ரங்கசாமிமுதல்வராக்கப்பட்ட போது ஏன் சென்று பார்க்கவில்லை.
எனவே வன்னியர்களுக்கு வழி செய்யவே இந்த சங்கம் துவக்கப்பட்டது. குடும்பத்துக்கு ரூ.10 வசூல் செய்யுங்கள்.அதிலிருந்து கல்வி உதவித்தொகை கொடுப்போம். கல்லூரி, மண்டபங்கள் கட்டுவோம்.
நமக்கு சண்டை சச்சரவுகள் தேவையில்லை. கலவரத்தை தூண்டி விட்டு மீன் பிடிக்க பார்க்கிறார் ராமதாஸ்,மாட்டிக்கொள்ளாதீர்கள் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications