இளங்கோவன் என்ன "கருணாநிதி காங்கிரஸா"? - யசோதா கேள்வி
சென்னை:
என்னை "ஜெ. காங்கிரஸ் என்று சொன்னால், இளங்கோவனை "க. காங்கிரஸ்" என்று சொல்லலாமா என்று தமிழகசட்டசபை காங்கிரஸ் தலைவரும் எம்.எல்.ஏவுமான யசோதா கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீப காலமாக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும், தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் யசோதாவும்மாறி மாறி தாக்கி அறிக்கை விட்டு கொண்டு இருக்கிறார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன் யசோதாவின் போக்கை கண்டித்து, இளங்கோவன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து யசோதாவும் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இவரின் தந்தை சம்பத் திமுகவை விட்டு வெளியேறி தமிழ் தேசிய கட்சி ஆரம்பித்த போது கருணாநிதி அதை குட்டிகாங்கிரஸ் என்றார். நான் எந்த கட்சியும் ஆரம்பிக்காத போது இளங்கோவன் என்னை "ஜெ. காங்கிரஸ்" என்றுகூறுகிறார். எனவே அவரை நான் "க. காங்கிரஸ்" என்று அழைக்கலாமா?
ஆதாரமற்ற, அற்பத்தனமான இந்த அறிவிப்பை அவர் நிரூபித்தாக வேண்டும். இப்படி வாய்க்கு வந்தபடி சொந்தகட்சிக்காரர்களை இழிவு படுத்துவது யாரை மகிழ்விப்பதற்காக என்று தெரியவில்லை.
ராஜீவ் காந்தியின ராணுவத்தை வரவேற்க மாட்டேன் என்று ராஜீவை பழித்தவரோடும், இந்திரா காந்தியின் அஸ்திசென்னைக்கு வந்த போது ஒரு மலர் வளையம் கூட வைக்காத திமுக தலைமையுடன் இவருக்கு நெருக்கம் அதிகம்.
எனக்கு யாரும் அறிக்கை எழுதி தர வேண்டியதில்லை. அந்த அளவுக்கு என் திறமையை குறைத்து மதிப்பிடுகிறார்.இந்திரா காந்தியால் "பைட்டிங் காக்" என்ற அழைக்கப்பட்டவள் நான். காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் கலந்துகொண்டு பத்து முறை சிறை சென்றுள்ளேன்.
சோனியா காந்தியின் அன்புக்கு பாத்திரமான என்னை காரணமில்லாமல் இவர் கேவலப்படுத்துவதை தொண்டர்கள்யாரும் ஏற்க மாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications