ஜெய்ஷ் அமைப்பின் தலைவன் மீது பாக். நடவடிக்கை
இஸ்லாமாபாத்:
ஜெய்ஷ்-ஏ-முகம்மத் அமைப்பின் தலைவன் மெளலானா மசூத் அஸார் இரு தினங்களுக்கு முன் வீட்டுக் காவலில்வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
விமானப் பயணிகளைக் காப்பாற்றுவதற்காக இவனை இந்திய அரசு விடுவித்தது. காஷ்மீர் சிறையில் இருந்தஇவனை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்தி சிங் சிறப்பு விமானத்தில் அழைத்துச் சென்று காண்டஹாரில்விட்டுவிட்டு வந்தார்.
இதன் பின்னர் இவர் பாகிஸ்தானுக்குச் சென்று அங்கு வசித்து வருகிறான். இவனை கைது செய்து தன்னிடம்ஒப்படைக்க வேண்டும் என இந்தியா பலமுறை கோரிக்கை விடுவித்தும் அதை பாகிஸ்தான்கண்டுகொள்ளவேயில்லை.
இந் நிலையில் தான் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்புடன் சேர்ந்து இந்திய நாடாளுமன்றத்தை மசூத் அஸார்தாக்கினான்.
இந்த இரு அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் பாகிஸ்தானைத் தாக்குவோம் என இந்தியாஎச்சரித்தையடுத்து இவற்றின் சொத்துக்களை முடக்கியது பாகிஸ்தான். இவற்றின் வங்கிக் கணக்குகள்முடக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் தாக்குதலில் இருந்து பாகிஸ்தானைக் காப்பாற்ற அமெரிக்கா இந்த அமைப்புகள் மீது நடவடிக்கைஎடுக்குமாறு பாகிஸ்தானை வற்புறுத்தி வருகிறது.
இந் நிலையில் மசூத் அஸாரின் வீட்டை பாகிஸ்தான் போலீசார் முற்றுகையிட்டனர். அவரை பல மணி நேரம்வீட்டுக் காவலில் வைத்தனர்.
இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை இப்போதைக்குக் குறைத்துக் கொள்ளுமாறு அவரை நிர்பந்தித்தனர்.மறுத்தால், வீட்டுக் காவல் தொடரும் எனவும் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவுக்கு இந்தியா தந்த நெருக்கடி காரணமாகத் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத்தெரிகிறது. அமெரிக்காவின் கோபத்தில் இருந்து தப்பவும் இந்தியாவின் தாக்குதலில் இருந்து தப்பவும் பாகிஸ்தான்மசூத் அஸாரை பாகிஸ்தான் கட்டுப்படுத்த ஆரம்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications