டான்சி வழக்கு: ஜெ. விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டான்சி வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து, சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்துவழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு டான்சி மற்றும் கொடைக்கானல் வழக்கில் தனி நீதிமன்றம் சிறைத் தண்டனைவழங்கியது.

இவற்றை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தார்ஜெயலலிதா. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி தினகரன் கடந்த 4ம் தேதி ஜெயலலிதா உள்ளிட்டோரைவிடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

இதையடுத்து வருகின்ற இடைத் தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா முடிவுசெய்திருந்தார்.

இந்நிலையில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ். சேகர்என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

டான்சி நிலம் அரசுக்கு சொந்தமான நிலமே அல்ல என்று நீதிபதி அவர்கள் தன் தீர்ப்பில் கூறியுள்ளார். அந்த நிலம்அரசுக்கு தான் சொந்தமானது என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

அந்த நிலத்தை குறைந்த விலையில் ஜெயலலிதா, சசிகலா முதலிட்டோர் வாங்கியதற்கான ஆதாரமும்என்னிடமுள்ளது என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+