மழையால் நிலச்சரிவு: ஊட்டி மலை ரயில் மீண்டும் ரத்து
கோயம்புத்தூர்:
மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ள காரணத்தால், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்படும்ரயில் போக்குவரத்து மீண்டும ரத்து செய்யப்பட்டது.
கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலைப்பாதை பலஇடங்களில் ரயில் தண்டவாளம் மண்ணால் மூடப்பட்டுள்ளது. இதனால் மலைப்பாதை ரயில் போக்குவரத்துநிறுத்தப்பட்டது.
தண்டவாளத்தில் கிடக்கும் மண்ணை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும், இன்று (புதன்கிழமை)காலைக்குள் போக்குவரத்து சீரடையும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுமார் ஒரு மாத காலமாக இதே காரணத்துக்காக ரத்து செய்யப்பட்டிருந்த இந்த மலை ரயில், கடந்த ஒரு வாரத்துக்குமுன்புதான் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications