கற்பழிப்பு முயற்சியில் கிழவர்: இளம்பெண் தீக்குளிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கிழவர் ஒருவர் கற்பழிக்க முயன்றதால், அவமானம் தாங்காமல் இளம்பெண் ஒருவர் தீக்குளித்தார்.

சென்னை அருகே உள்ள மணலியை சேர்ந்தவர் சேகர். இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவரது மனைவிசித்ரா (18).

அதே ஊரை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் வாட்ச் மேனாக வேலை பார்ப்பவர் நடன சிகாமணி (60).

இவர் சேகர் வீட்டு வழியாக தான் வேலைக்கு செல்வார். இதனால் சித்ராவோடு பழக்கம் ஏற்பட்டது. நேற்று(செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் சித்ரா வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த நடன சிகாமணி சித்ராவிடம் நைசாக பேசி கற்பழிக்க முயன்றுள்ளார். சித்ரா சத்தம்போடவே வீட்டினுள் தூங்கிக் கொண்டு இருந்த சேகர் எழுந்து ஓடி வந்துள்ளார். பக்கத்து வீட்டு பெண்களும் கூடிவிட்டனர்.

தப்பி ஓட முயன்ற நடன சிகாமணியை அடித்து துவைத்து விட்டனர். பின்னர் மணலி போலீசாரிடம் அவரைஒப்படைத்து விட்டனர்.

இதனால் தனக்கு அவமானம் ஏற்பட்டதாக கருதிய சித்ரா தனது உடலில் மண்ணெண்னெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+