இ. கம்யூனிஸ்டு தலைவர் தங்கமணி மரணம்
சென்னை:
முதுபெரும் இந்திய கம்யூனிஸ்டு தலைவர் கே.டி.கே. தங்கமணி இன்று (புதன்கிழமை) காலை சென்னை அரசுமருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 86.
சில நாட்களுக்கு முன்பு நோய் வாய்ப்பட்டு சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார் தங்கமணி. ஆனால் இன்று அதிகாலை 2.30 மணிக்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் காலமானார்.
இவர் 1932ம் ஆண்டு லண்டன் பார் கவுன்சிலில் உறுப்பினராக இருந்தவர். பின்பு பல வர்த்தக சங்கங்களுக்குதலைவராகவும் இருந்தவர்.
பிறகு 1953 முதல் 1964 வரை ஏ.ஐ.டி.யூ.சி.-ல் அகில இந்திய செயலாளராகவும், பிறகு அதே இயக்கத்துக்கு தமிழ்நாடு தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.
1957லிருந்து 1964 வரை எம்.பி.யாகவும் இருந்தார். அதன் பிறகு 1974லிருந்து 1976 வரை எம.எல்.ஏ.வாகவும்பதவி வகித்தார்.
இவரது மறைவையொட்டி அவருக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் மூன்று நாட்களுக்கு கட்சி கொடி அரைகம்பத்தில் பறக்க விடப்படும் என்று இ. கம்யூனிஸ்டு மாநில தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்தார்.
அவரது உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக அந்த கட்சியின் மாநில தலைமை அலுவலகம் இயங்கி வரும்பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications