ராஜ்யசபா தேர்தலில் த.மா.கா. போட்டி
சென்னை:
மூப்பனார் காலமானதால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப நடக்கும் ராஜ்யசபா தேர்தலில் தமாகா போட்டியிட முடிவுசெய்திருப்பதாக் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
மூப்பனார் காலமானதை தொடர்ந்து ராஜ்யசபாவில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப தேர்தல் கமிஷன் ஜனவரி 17ம்தேதி தேர்தல் நடத்துவதாக அறிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து தமாகா ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் தெரிவித்தார்.
இந்த தேர்தலில் போட்டியிட அதிமுகவின் ஆதரவைக் கோருவீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, முறையானஅறிவிப்பு வரும் வரை பொறுத்திருங்கள் என்றார்.
மேலும் அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில்,
பாண்டிச்சேரி காங்கிரஸ் அமைச்சரவையில் தமாகா சேர்வதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இந்தவிஷயத்தில் நான் அவசரப்பட மாட்டேன்.
தமாகாவில் எல்லோரும் என் தலைமையின் கீழ் பணியாற்ற ஆர்வமுடன் இருக்கிறார்கள். எங்கள் கட்சி தேசியஅளவில் காங்கிரஸின் ஒத்துழைப்பையும், அவர்களுடன் இணைந்து செயல்படவும் விரும்புகிறார்கள் என்றும்அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications