For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உஷார் நிலையில் பாகிஸ்தான் விமான நிலையங்கள்

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதையடுத்து பாகிஸ்தானில் உள்ள அனைத்து விமானநிலையங்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

எல்லையில் தற்போதே பயங்கரமான துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதால், பாகிஸ்தான் தனது பயணிகள்விமான நிலையங்களையும் தயார் செய்ய ஆரம்பித்து விட்டது.

விமானத்தை தாக்கி அளிக்கும் பீரங்கிகளையும் விமான நிலையங்களுக்கு அருகில் பாகிஸ்தான் குவித்து வருகிறது.

போர் மூளுமானால் அனைத்து விமான நிலையங்களையும் பாகிஸ்தான் விமானப் படை உபயோகப்படுத்தும்என்று பாகிஸ்தான் பத்திரிக்கையான தி நியூஸ் பத்திரிக்கை இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது.

மேலும் கடற்கரையில் கடற்படையும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு தற்போது கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையங்களுக்கு ஆபத்து காலத்தில் நடத்தும் பயிற்சியை உடனடியாக மேற்கொள்ளும்படி விமானநிலைய அதிகாரிகளை பாகிஸ்தான் அரசு முடுக்கியுள்ளது.

போர் மூளும் பட்சத்தில் விமானப் போக்குவரத்தை நிறுத்தும்படி வெளிநாட்டு விமானப் போக்குவரத்துநிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது பாகிஸ்தான்.

இதையடுத்து போருக்காக முழு வீச்சில் பாகிஸ்தான் தயாராகி வருவது தெரிய வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X