பழிவாங்கவே கருணாநிதி வழக்கு போட்டார்: ஜெ.
சென்னை:
தன்னைப் பழிவாங்குவதற்காகவே இந்த நிலக்கரி ஊழல் வழக்கு கருணாநிதியால் போடப்பட்டது என்றுஜெயலலிதா கூறினார்.
நிலக்கரி ஊழல் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு வந்த தீர்ப்பை அடுத்து, தனி நீதிமன்றத்தை விட்டுவெளியே வந்த ஜெயலலிதா நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த வழக்கில் முன்பே நான் குற்றமற்றவள் என்று தனி நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தீர்ப்பளித்திருந்தன.ஆனால் திமுக தலைவர் கருணாநிதி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
உச்ச நீதிமன்ற ஆணைப்படி மீண்டும் வழக்கை விசாரித்த தனி நீதிமன்றம், இப்போதும் நான் குற்றமற்றவள் என்றுதீர்ப்பு வழங்கியுள்ளது.
இதன் மூலம் கருணாநிதி என் மேல் வீண் பழி சுமத்தி என் மீது வழக்கு போட்டுள்ளார் என்பது நிரூபணமாகிஉள்ளது என்றார் ஜெயலலிதா.
ஆண்டிப்பட்டியில் போட்டியிடுவது பற்றி பின்பு தெரிவிப்பதாகக் கூறிய ஜெயலலிதா, உடனடியாக தனிநீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்.