For Daily Alerts
Just In
கிழவர் கற்பழிக்க முயற்சி: தீக்குளித்த இளம்பெண் மரணம்
சென்னை:
சென்னை அருகே 60 வயது கிழவர் கற்பழிக்க முயன்றதால் அவமானமடைந்து தீக்குளித்த இளம்பெண் நேற்றுமரணமடைந்தார்.
சென்னை அருகே உள்ள மணலியை சேர்ந்தவர் சேகர். இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவரது மனைவிசித்ரா (18).
அதே ஊரை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் வாட்ச் மேனாக வேலை பார்ப்பவர் நடன சிகாமணி (60).
இவர் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) சித்ராவை கற்பழிக்க முயன்றார், ஆனால் அக்கம்பக்கம்உள்ளவர்கள் சத்தம் கேட்டு சித்ராவை காப்பாற்றி விட்டனர்.
இதனால் தனக்கு அவமானம் ஏற்பட்டதாக கருதிய சித்ரா தனது உடலில் மண்ணெண்னெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் நேற்று சித்ரா, சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். மணலி போலீசார் நடனசிகாமணியை கைதுசெய்துள்ளனர்
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]