ரூ.3.97 கோடி கட்சிக் கடனை அடைத்தார் ஜெ.
சென்னை:
வருமான வரி கட்டுவதற்காக கடந்த 1997ல் கட்சியிடமிருந்து வாங்கிய ரூ.3.97 கோடியையும் திருப்பிக்கட்டிவிட்டார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
கடந்த 1997ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு எதிராகப் பல வழக்குகள் போடப்பட்டன. இதையடுத்து அவருடையசொத்துக்கள் அனைத்தும் முடக்கி வைக்கப்பட்டன.
இதனால் தன்னுடைய வருமான வரியைக் கட்டுவதற்காக தன்னுடைய சொந்தக் கட்சியான அதிமுகவிடமிருந்தேஜெயலலிதா 3 கோடியே 97 லட்சத்து 26 ஆயிரத்து 573 ரூபாய் கடனாகப் பெற்றிருந்தார்.
இதற்கிடையே ரூ.2.65 கோடி கடனை அவர் ஏழு தவணைகளில் ஏற்கனவே அடைத்து விட்டார்.
கட்சிக்குத் தரவேண்டிய மீதமுள்ள ஒரு கோடியே 32 லட்சத்து 26 ஆயிரத்து 573 ரூபாய் கடனையும் இன்று(வியாழக்கிழமை) அவர் அடைத்து விட்டார்.
இதற்கான செக்கை அதிமுக பொருளாளரும் எம்.பியுமான ஸ்ரீநிவாசனிடம் ஜெயலலிதா இன்று காலைகொடுத்தார்.
அதிமுக இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் வருமான வரிகட்டுவதற்காக வாங்கிய கடன் முழுவதையும் ஜெயலலிதா அடைத்துவிட்டார்.
டான்சி மற்றும் கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் ஆகிய வழக்குகளில் கடந்த 4ம் தேதியும் நிலக்கரி ஊழல்வழக்கில் இன்றும் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.