பழிவாங்கும் நடவடிக்கை என்றுமே ஜெயிக்காது: கண்ணப்பன்
சென்னை:
பழிவாங்கும் நடவடிக்கை எப்போதுமே வெற்றி பெறாது என்று மக்கள் தமிழ் தேசத் தலைவரும் முன்னாள்அதிமுக அமைச்சருமான கண்ணப்பன் இன்று (வியாழக்கிழமை) கூறினார்.
நிலக்கரி ஊழல் வழக்கில் இன்று அளிக்கப்பட்ட தனி நீதிமன்றத் தீர்ப்பில் கண்ணப்பனும் விடுதலைசெய்யப்படுவதாகக் கூறப்பட்டது.
இதுகுறித்து கண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:
பழிவாங்கும் நோக்கத்துடனேயே திமுக எங்கள் மீது வழக்குத் தொடர்ந்தது.
ஆனால் பழிவாங்கும் நடவடிக்கை என்றுமே வெற்றி பெறுவதில்லை என்பதை இந்தத் தீர்ப்பு நிரூபித்துள்ளது.
நாங்கள் நிரபராதிகள்தான் என்று ஏற்கனவே தனி நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இப்போது மீண்டும் நீதிநிலைநாட்டப்பட்டுள்ளது.
மக்கள் நலனுக்காகத்தான் நாங்கள் அப்போது ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரியைஇறக்குமதி செய்தோம்.
தற்போது நியாயத்தின் அடிப்படையிலேயே தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றார் கண்ணப்பன்.












Click it and Unblock the Notifications