For Daily Alerts
Just In
எதிர்பார்த்தது தான் என்கிறார் சு.சுவாமி
சென்னை:
நிலக்கரி ஊழல் வழக்கில் ஜெயலலிதா விடுதலை ஆவார் என்பது எதிர்பார்த்தது தான் என்று ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
ஜெயலலிதாவை விடுதலை செய்து தனி நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்துசுப்ரமணியம் சுவாமி நிருபர்களிடம் கூறியதாவது:
அரசு தரப்பு வழக்கறிஞர் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். அதாவது ஜெயலலிதா கட்டுப்பாட்டில்இருக்கிறார்.
எனவே நிலக்கரி ஊழல் வழக்கிலும் ஜெயலலிதா விடுதலை ஆவார் என்று எதிர்பார்த்தது தான்.
நான் டான்சி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வரும் ஜனவரி 7ம் தேதி மனு தாக்கல் செய்கின்றேன்என்றார் சுவாமி.
Comments
admk karunanidhi judge scam subramaniam swamy tamilnadu judgement andipatti jayalalitha kannappan special court verdict byelection coal
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]