டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுகள் தள்ளிவைப்பு
சென்னை:
டி.என்.பி.எஸ்.சி., தொகுதி 1ல் அடங்கிய பதவிகளுக்கான வரும் ஜனவரி முதல் வாரத்தில் நடக்க இருந்ததேர்வுகள் பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 1ல் அடங்கிய பதவிகளுக்கு வரும் ஜனவரி2ம் தேதி முதல் தேர்வுகள் துவக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வுகள் பிப்ரவரி 9ம்தேதி முதல் துவங்கும்.
மேலும், ஜனவரி 5 மற்றும் 6ம் தேதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகளும் பிப்ரவரி 2 மற்றும்3ம் தேதிகளுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
வரும் பிப்ரவரி 16 மற்றும் 17ம் தேதிகளில் நடக்கவிருந்த ஒருங்கிணைந்த பொறியியற் பணித்தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
இத்தேர்வுகள் நடத்தப்படும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழக அரசின் செய்தி குறிப்பில்அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications