For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய அணு ஆயுதங்கள், கடற்படையும் தயார்

By Staff
Google Oneindia Tamil News

திரிச்சூர்:

இந்தியாவின் அணு ஆயுதங்களும் அவற்றைச் செலுத்தும் ஏவுகணைகளும் விமானங்களும் பாகிஸ்தானிடம்உள்ளதைவிட பல மடங்கு திறன் வாய்ந்தவை என இந்திய அணுக் கமிஷனின் தலைவர் அனில் கடோட்கர்கூறினார்.

பொக்ரானில் இரு ஆண்டுகளுக்கு முன் இந்தியா நடத்திய அணு குண்டுச் சோதனையில் மிக முக்கிய பங்குவகித்தவர் அனில்.

கேரளா வந்திருந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், நம்மை அணு ஆயுதம் கொண்டு தாக்க எதிரி நாடுதிட்டமிட்டால் அதைச் சமாளிக்கவும் எதிர் தாக்குதல் நடத்தவும் அனைத்து தொழில்நுட்பமும் தயாராக உள்ளது.

அணு ஆயுதங்கள் மட்டுமல்ல, அவற்றைச் செலுத்தவும் நம்மிடம் அதிக திறன் மிக்க விமானங்களும்,ஏவுகணைகளும் உள்ளன. எல்லா கட்டமைப்பும் தயார் நிலையில் உள்ளது.

நாட்டின் பாதுகாப்பு எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றார்.

அணு ஆயுதப் போருக்கு பாக். தயாராக இல்லை:

இந் நிலையில் இந்தியாவுடன் அணு ஆயுதப் போருக்கு நாங்கள் தயாராக இல்லை என பாகிஸ்தான் கூறியுள்ளது.

பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ரஷீத் குரேஷி கூறுகையில்,

இந்தியாவும் பாகிஸ்தானும் பொறுப்பான நாடுகள். அணு ஆயுதப் போர் குறித்து சிந்திக்கக் கூட தேவையில்லை.இந்தியாவுடன் நாங்கள் எந்த மோதலையும் விரும்பவில்லை.

இந்திய விமானப் படைகள் பாகிஸ்தான் எல்லைக்குள் பறக்க ஆரம்பித்துள்ளதாக வந்துள்ள செய்திகளில்உண்மையில்லை. எல்லையில் சில தினங்களில் இந்திய ராணுவம் முழு அளவில் குவிக்கப்பட்டுவிடும் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பெர்னாண்டஸ் கூறியுள்ளார். நாங்கள் அதைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்.

எங்களால் இந்தியத் தாக்குதலை எல்லா விதத்திலும் தடுத்துவிட முடியும் என்பது அந்த நாட்டுக்கே தெரியும்என்றார்.

இந்திய கடற்படையும் தயார்:

இந் நிலையில் முதலில் ராணுவம், விமானப் படையை தயார் நிலைக்குக் கொண்டு வந்த இந்தியா இப்போதுகடற்படையையும் தயார்படுத்தி உள்ளது.

மேற்குக் கடற்கரைப் பகுதியில் இந்திய கடற்படை முழு அளவில் தயாராக உள்ளதாக பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் கூறினார்.

அவர் கூறுகையில், கப்பல்களும், வீரர்களும், ஆயுதங்களும், ஏவுகணைகளும் எந்த நேரத்திலும் எந்தத்தாக்குதலையும் நடத்தும் நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

மும்பை, கொச்சி கடற்படைத் தளங்களில் ஆயுதங்கள் குவிக்கும் பணி துவங்கியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X