"அல்-கொய்தாவினரைக் கூண்டோடு அழிப்போம்"
Subscribe to Oneindia Tamil
காபூல்:
ஆப்கானிஸ்தானிலிருந்து அல்-கொய்தா அமைப்பைக் கூண்டோடு களைந்து எறிவோம் என்று அந்நாட்டின்பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அப்துல் ரஷித் தோஸ்தம் சூளுரைத்துள்ளார்.
அமைச்சராகப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக தொலைக்காட்சியில் பேட்டியளித்த தோஸ்தம், ஒளிந்துகொண்டிருக்கும் இந்த இரண்டு பேரும் எப்போது வேண்டுமானாலும் இந்த இடைக்கால அரசைக் கவிழ்ப்பதற்குமுயற்சிக்கலாம் என்று அவர் அச்சம் தெரிவித்தார்.
பின் லேடனையும் முல்லா ஒமரையும் பிடிப்பதற்கு இன்னும் அதிக அளவில் ஆப்கானியப் படைகளை அனுப்பஇருப்பதாகவும் தோஸ்தம் அப்போது கூறினார்.
அல்-கொய்தா மற்றும் தலிபான் படையினரைக் கூண்டோடு அழிப்பதற்கு சுமார் 10,000 முதல் 15,000 வீரர்கள்வரை இதற்காகத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications