மேம்பால ஊழல்: அடையாறு பாலத்தில் சி.பி.சி.ஐ.டி. சோதனை
சென்னை:
சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் நடந்த முறைகேடுகள் பற்றி விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார்இன்று (வெள்ளிக்கிழமை) காலை அடையாறு பாலத்தைச் சோதனையிட்டனர்.
கடந்த திமுக ஆட்சியில் மாநகராட்சியால் மேம்பாலங்கள் கட்டப்பட்டதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகசி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் அடையாறு பாலத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று ஆராய்ந்தனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி.அதிகாரி முகமது அலி கூறுகையில்,
பாலங்கள் கட்டப் பயன்படுத்தப்பட்ட பொருட்களில் முறைகேடு நடந்துள்ளதா என்று இந்த பாலத்தில் ஆராய்ந்துவருகிறோம். இந்த பாலம் கட்டப் பயன்படுத்த கற்கள், இரும்புகள் தரமானதா என்று ஆராய்ந்து வருகின்றோம்.
மேலும் இந்த பாலம் இந்த போக்குவரத்தை தாங்கும் அளவில் கட்டப்பட்டுள்ளதா என்றும் விசாரித்துவருகின்றோம்.
இது வரை கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட 8 பாலங்களை பற்றி விசாரித்து விட்டோம். மேலும் பாலம் கட்டுவதில்சம்பந்தப்பட்ட 75 சாட்சிகளுக்கு மேல் விசாரணை செய்து முடித்து விட்டோம்.
விசாரணை முழுவதும் முடிந்த பிறகு விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம் என்று முகமதுஅலி கூறினார்.












Click it and Unblock the Notifications