For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி-லாகூர் பஸ்சின் கடைசிப் பயணம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பாகிஸ்தானுக்கு பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதையடுத்து, டெல்லியிலிருந்து இன்று (வெள்ளிக்கிழமை)காலை லாகூருக்கு கடைசி பஸ் புறப்பட்டுச் சென்றது.

நாடாளுமன்றத் தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படாததைத்தொடர்ந்து, பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது.

பாகிஸ்தானிலிருந்து இந்தியத் தூதரைத் திரும்ப அழைத்துக் கொண்ட கையோடு, டெல்லி-லாகூர் பஸ்போக்குவரத்தும், அமிர்தசரஸ்-லாகூர் ரயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்படும் என்றும் இந்தியா அறிவித்தது.

கடந்த 2 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வந்த இந்த டெல்லி-லாகூர் பஸ், வாரத்தில் 3 நாட்களுக்கு இயங்கிவந்தது.

இன்று அதிகாலை டெல்லியில் நிலவிய கடும் பனிமூட்டத்துக்கிடையே லாகூர் பஸ் கிளம்பியது. ஆனால் பஸ்சில்இருந்த பயணிகளில் ஒருவரின் முகத்தில் கூட மகிழ்ச்சியே இல்லை.

இரு நாடுகளுக்குமிடையே பஸ், ரயில் போக்குவரத்து தொடர வேண்டும் என்று அனைவருமே விரும்புகிறார்கள்.

டெல்லியில் உள்ள தன் உறவினரை இனி எப்போது பார்க்கப் போகிறோம் என்ற ஏக்கத்துடன் ஒருவர் இந்த பஸ்சில்அமர்ந்திருந்தார். இதுபோல ஒவ்வொருவரிடமும் ஒரு கதை உள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X