பதவிக்காகவே சிலர் காங்கிரசில் உள்ளனர்: இளங்கோவன்
காஞ்சிபுரம்:
காங்கிரஸில் சேவை செய்வதற்கென்றே சிலர் இருக்கும் வேளையில் பதவியை அனுபவிப்பதற்கென்றே இன்னும்சிலர் உள்ளனர் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் செங்கல்பட்டில் நேற்று (வியாழக்கிழமை) நடந்தது. இந்தகூட்டத்தில் இளங்கோவன் கூறியதாவது:
நாம் 35 ஆண்டுகள் பதவி இல்லாமல் இருந்து விட்டோம். காங்கிரஸில் சேவை செய்வதற்கென்றே சிலர்இருக்கின்றனர். பதவியை அனுபவிப்பதற்கென்றே சிலர் இருக்கின்றனர்.
இப்போது உள்ள மத்திய, மாநில அரசுகள் மக்கள் நலவாழ்வுக்காக எந்த நலத்திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.கடந்த 7 மாத அதிமுக ஆட்சியில் என்னென்ன வேதனைகள் என்பதை கொஞ்சம் எண்ணி பாருங்கள். அரசுவிதித்துள்ள வரிச்சுமையை மக்கள் எப்படி தாங்குவார்கள்.
இது நியாயமா என்று கேட்டால், மக்கள் மகிழ்சியுடன் ஏற்றுக் கொள்வார்கள் என்று கூறிவிட்டு , தோழியுடன்ஹைதராபாத் திராட்சை தோட்டத்திற்கு சென்று விட்டார். தமிழகத்தில் மக்கள் குமுறிக் கொண்டு இருக்கின்றனர்.
மக்களை எப்படி ஏமாற்றுவது என்பதில் தான் இந்த அரசு கவனத்தை செலுத்தி கொண்டிருக்கிறது. 96 தேர்தலில்மக்கள் புகட்டிய பாடம் ஜெயலலிதாவுக்கு நினைவில் இருக்கும், அதனால் சிறிது அடக்கி வாசிப்பார் என்றுபார்த்தோம். ஆனால் திருந்தாதவர்களை என்ன செய்ய முடியும்.
கருணாநிதியை கைது செய்த போது, சோனியா காந்தி மட்டும் தலையை அசைத்திருந்தால் இன்று ஆட்சியில்இருப்பவர்கள் எல்லாம் கம்பிகளுக்கு பின்னால் இருந்திருப்பார்கள்.
தமிழகத்துக்கு சட்டசபைத் தேர்தல் வரும் வாய்ப்பு உள்ளது. அப்போது காங்கிரஸ் தனித்து போட்டியிடும்.காங்கிரஸ் இனி சுயமரியாதையை விட்டுக் கொடுக்காது என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications