பேச்சுவார்த்தை: நார்வேயிடம் இலங்கை கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உதவுமாறு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நார்வேயிடம்கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் புதிய பிரதமராகப் பதவியேற்ற விக்கிரமசிங்கே, இலங்கையில் அமைதி ஏற்பட எல்லாநடவடிக்கையையும் மேற்கொள்வதாக கூறியிருந்தார். அவர் பேச்சுவார்த்தையைத் துவங்குவதற்கு வசதியாகவிடுதலைப்புலிகளும் போர் நிறுத்தம் செய்துள்ளனர்.

இதற்கிடையே விக்கிரமசிங்கே பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தி விட்டார். கடந்த வாரஇறுதியில் இந்தியாவிற்குச் சென்ற அவர், வாஜ்பாய் உள்பட முக்கியத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

பேச்சுவார்த்தைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக இந்தியாவும் உறுதி அளித்துள்ளது.

இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு மீண்டும் உதவுமாறு நார்வே நாட்டிடம் இலங்கை அரசு வேண்டுகோள்விடுத்துள்ளது. அந்நாட்டு பிரதமர் ஜெல் மக்னே போன்டெவிக்கிடம் இதுகுறித்து டெலிபோனில் பேசியுள்ளார்விக்கிரமசிங்கே.

ஜனவரி மாதம் நார்வே பேச்சுவார்த்தைக் குழுவினர் இலங்கைக்கு வரவிருப்பதாகவும் விக்கிரமசிங்கே கூறினார்.

இதற்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியையும் இலங்கை அரசுகோரியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+