பேச்சுவார்த்தை: நார்வேயிடம் இலங்கை கோரிக்கை
கொழும்பு:
இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உதவுமாறு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நார்வேயிடம்கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே விக்கிரமசிங்கே பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தி விட்டார். கடந்த வாரஇறுதியில் இந்தியாவிற்குச் சென்ற அவர், வாஜ்பாய் உள்பட முக்கியத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
பேச்சுவார்த்தைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக இந்தியாவும் உறுதி அளித்துள்ளது.
இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு மீண்டும் உதவுமாறு நார்வே நாட்டிடம் இலங்கை அரசு வேண்டுகோள்விடுத்துள்ளது. அந்நாட்டு பிரதமர் ஜெல் மக்னே போன்டெவிக்கிடம் இதுகுறித்து டெலிபோனில் பேசியுள்ளார்விக்கிரமசிங்கே.
ஜனவரி மாதம் நார்வே பேச்சுவார்த்தைக் குழுவினர் இலங்கைக்கு வரவிருப்பதாகவும் விக்கிரமசிங்கே கூறினார்.
இதற்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியையும் இலங்கை அரசுகோரியுள்ளது.