இடைத்தேர்தலில் மதிமுக தனித்துப் போட்டி
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
தமிழகத்தில் 3 தொகுதிகளில் நடைபெறும் இடைத் தேர்தலில் மதிமுக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின்பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
திருநெல்வேலியில் நடந்த மதிமுக பொதுக்கூட்டத்தில் வைகோ கூறியதாவது:
தமிழகத்தில் மதிமுக மட்டுமே உண்மையான திராவிடக் கட்சியாக செயல்படுகிறது.
அதிமுக அரசு பல வரிச்சுமைகளையும், விலைவாசி உயர்வையும் பொது மக்களின் மீது செலுத்தி மக்களுக்குவிரோதமான ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறது.
வரும் இடைத் தேர்தலில் ஆண்டிப்பட்டி, சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி ஆகிய 3 தொகுதிகளிலும் மதிமுகதனித்து போட்டியிடும்.
வரும் ஜனவரி மாதம் 11ம் தேதி திருச்சியில் நடக்கும் செயற்குழு கூட்டத்தில் வேட்பாளர்கள் பற்றி முடிவுசெய்யப்படும் என்று வைகோ கூறினார்.












Click it and Unblock the Notifications