மழையால் நிலச்சரிவு: தமிழகத்திலிருந்து ஊட்டி துண்டிப்பு
ஊட்டி:
பலத்த மழை காரணமாக ஊட்டி மலைப் பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், தமிழகத்திலிருந்துஊட்டி நகரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்துமேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்குச் செல்லும் ரயில் பாதைகளில் ஆங்காங்கே நிலச்சரிவு காரணமாகதண்டவாளங்கள் மூடப்பட்டன.
இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை காரணமாக, சாலைப் பகுதிகளிலும் நிலச்சரிவுகாரணமாக பாறைகளும் மணற்குவியலும் வந்து நிரம்பியுள்ளன.
இதையடுத்து மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலைப் போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால்ஊட்டிக்குச் செல்ல வேண்டிய பொருள்களை ஏற்றிக் கொண்டு சென்ற லாரிகள் கோத்தகிரி வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளன.
ஆனால் இப்பாதை மிகவும் குறுகலாக இருப்பதால் வாகனங்கள் மிக மெதுவாகவே சென்று கொண்டிருக்கின்றன.நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஊட்டிக்குச் செல்ல முடியாமல் மேட்டுப்பாளையத்திலேயே கடந்த 2 நாட்களாகநின்று கொண்டிருக்கின்றன.
இதற்கிடையே ஹில்குரோவ்-கல்லாருக்கிடையே மலைப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள பாலமும் நிலச்சரிவினால்உடைந்துள்ளதால், இப்பகுதியில் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.
இப்பாலத்தைச் சீர்செய்வதற்கு இன்னும் பல நாட்கள் ஆகும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதையடுத்து ஊட்டிக்குப் பயணம் செல்லும் ஆவலோடு வந்த சுற்றுலாப் பயணிகள் கடுமையான ஏமாற்றம்அடைந்துள்ளனர்.