பாகிஸ்தானும் பதில் நடவடிக்கை
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் மீது இந்தியா எடுத்துள்ள கடுமையான நடவடிக்கைகளை அடுத்து, அந்த நாடும் பதில்நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதே போல் பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையும் பாதியாகக் குறைக்கப்படும்என்று அந்நாடு அறிவித்துள்ளது.
இவற்றைத் தவிர, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரக ஊழியர்கள் யாரும் அந்நகரை விட்டு வெளியேறக்கூடாது என்றும் பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்றத் தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் சரியானநடவடிக்கைகள் எடுக்காத காரணத்தால் நேற்று இதுபோன்ற நடவடிக்கைகளை இந்திய அரசு அறிவித்திருந்தது.
பாகிஸ்தானும் தற்போது அதேபோன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications