முஷாரப் விமானம் நேபாளம் செல்ல முடியாது: சார்க் மாநாடு ஒத்திவைப்பு?
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்பகுதியில் பறப்பதற்கு இந்தியா தடை விதித்துள்ளதால், முஷாரப்விமானமும் ரத்து செய்யப்படலாம் என்னும் நிலையில் ஜனவரி 4ம் தேதி துவங்கவிருந்த சார்க் மாநாடுஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்பகுதி வழியாக பறப்பதற்கு இந்தியா தடை விதித்துள்ளது.பாகிஸ்தானிலிருந்து நேபாளத்துக்குச் செல்லும் விமானமும் இதனால் ரத்து செய்யப்படவுள்ளதால், முஷாரப்பின்காட்மாண்டு பயணமும் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்க் அமைப்பில் உறுப்பு நாடுகளாக உள்ள 7 நாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டால்தான் மாநாடுநடைபெறும் என்பது அவ்வமைப்பின் விதிமுறைகளில் ஒன்று.
எனவே முஷாரப் வரவில்லை என்றால் சார்க் மாநாடு ஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா விதித்துள்ள தடை காரணமாக, பாகிஸ்தான் ஏர்லைன்சுக்குச் சொந்தமான 23 விமானங்கள் ரத்துசெய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.