நாகை அருகே மூழ்கிய கப்பல் 6 நாட்கள் போராடி மீட்பு
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் கடலில் மூழ்கிய குட்டிக் கப்பல் 6 நாட்களாக போராடி கரைக்கு இழுத்து வரப்பட்டது.
கடந்த வாரம் ஆந்திர கம்பெனியான பேட்ஸ் அண்டு புபீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பார்ஜர் என்ற கப்பல்பாமாயிலை ஏற்றிக் கொண்டு மலேசியாவிலிருந்து வந்தது.
பலத்த காற்று காரணமாக திசை மாறிய இந்தக் கப்பல் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 5 கி.மீ. தூரத்தில் தரைதட்டி கடலில் மூழ்கியது. இதன் காரணமாக கப்பல் டேங்கரில் ஓட்டை விழுந்து 3 ஆயிரம் டன் பாமாயில் கடலில்கொட்டியது.
கடலில் இருந்து சிறிது தூரத்தில் மூழ்கிக்கிடந்த கப்பலை மீட்கும் பணி 6 நாட்களாக நடந்தது. மூழ்கிய கப்பலில்இரும்பு கயிறுகளை கட்டி, விசைப்படகுகள் மூலமாகவும், பொக்ளைன் இயந்திரம் மூலமாகவும் கரையை நோக்கிஇழுத்தனர்.
ஒரு வழியாகக் கப்பல் கரைக்கு கொண்டு வரப்பட்டது. கப்பலுக்கு பெரிதாக எந்த சேதமும் ஏற்படவில்லை. ஆனால்கொண்டு வந்து அத்தனை பாமாயிலும் கடலில் கொட்டிவிட்டதால் அப்பகுதியில் உள்ள கடல் நீர் முழுவதும்மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications