ராஜகோபாலுக்கு உதவிய ரவுடி குண்டர் சட்டத்தில் சிறையடைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கடந்த மாதம் கைது செய்யப்பட்ட பிரபல அரசியல் ரவுடி அப்பு குண்டர் தடுப்பு சட்டத்தில் வேலுர் சிறையில்அடைக்கப்பட்டான்.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவன் அப்பு. இவன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவன் எந்த கட்சிஆட்சிக்கு வந்தாலும் அந்த ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாகி தன்னை வளர்த்து கொள்வான்.
இவனை கடந்த மாதம் வட சென்னை தொழில் அதிபர் ஒருவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் போலீசார்கைது செய்தனர்.
மேலும் இவன் சரவண பவன் அதிபர் ராஜகோபாலுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் போலீசார் விசாரணையில்தெரிய வந்தது.
அப்பு மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் இருப்பதால் இவனை, சென்னை போலீஸ் கமிஷனர் விஜயகுமார்உத்தரவுப்படி குண்டர் சட்டத்தில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டான்.












Click it and Unblock the Notifications